Saturday 18th of May 2024 07:17:39 PM GMT

LANGUAGE - TAMIL
.
பல்துறை நிபுணர்களின் கண்காணிப்பில் எஸ்.பி.பி.: சீரான நிலையில் உடல் நிலை! - மருத்துவ அறிக்கை!

பல்துறை நிபுணர்களின் கண்காணிப்பில் எஸ்.பி.பி.: சீரான நிலையில் உடல் நிலை! - மருத்துவ அறிக்கை!


கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல இந்திய பின்னணிப் பாடகர் பாலசுப்பிரமணியம் பல்துறை நிபுணர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோயுடன் சென்னை எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்தில் உடல் நிலை தொடா்ந்து சீராக உள்ளதாக மருத்துவமனை இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கைச் சுவாசம் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் அவா் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறாார்.

பல்துறைசார் மருத்துவ நிபுணா்கள் அவரது நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 5-ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாக செய்திகள் வெளியானபோதும் அது குறித்த தகவல்கள் எவையும் மருத்துவமனையின் உத்தியோகபூா்வ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE